Tuesday, November 7, 2017

தமிழ் ஆரிய மத வேறுபாடு

தமிழ் ஆரிய மத வேறுபாடு
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆய்வு

 வேதக்காலம்
 தமிழம்
  1. சிறுதெய்வ வணக்கமும் பெருந்தேவ மதமும் கடவுள் சமயமும்.
  2. இல்லத்திலும் கோவிவிலும் உருவ வழிபாடும் எங்கும் உருவிலா வழிபாடும்
  3. தமிழக் குருக்கள்
  4. தமிழ் வாயில்
  5. மறுமையில் நல்வாழ்வும் விண்ணுலகப் பேறும் வீடுபேறும்
  6. வாய்மையால் தூய்மை
  7. மக்கள் நல்லொழுக்கத்தாலும் செங்கோலாட்சியாலும் மழையெனல்

ஆரியம்
  1. பல் சிறுதெய்வ வணக்கம்
  2. வீட்டிலும், வெளியிலும் வேள்வி வளர்த்தல்
  3. பிராமணக் குருக்கள்
  4. வேத மந்திர வாயில்
  5. மறுமையில் விண்ணுலப் பேறு
  6. நீரால் தூய்மை
  7. வேள்வியால் மழையெனல்
                                           

முத்திருமேனி / இந்துமதக் காலம்
தமிழம்

  1. சிவ வழிபாடு / திருமால் வழிபாடு/ கடவுள் வழிபாடு
  2. சிவன் முத்தொழில் தலைவன் / திருமால் முத்தொழில் தலைவன் எனல்.
  3. தமிழ் வழிபாடு ஆரியரால் நீக்கப்பட்டது.
  4. தமிழக் குருக்கள் கோயில் வழிபாட்டுத் தொழிலினின்று விலக்கப்பட்டனர்.
  5. தேங்காய் பழம் படைத்தல்.
  6. துறவறமும் வீடுபேறும் எல்லார்க்கும் உரியன
  7. இல்லறம் துறவறம் என வாழ்க்கைநிலை எல்லார்க்கும் இரண்டே
  8. இல்லறத்தாலும் துறவறத்தாலும் வீடுபேறு
  9. ஒழுக்கத்தாற் சிறப்பு
  10. தமிழும் தேவமொழி யெனல்
  11. ஏழைகள் எல்லாம் தானம் பெறற்குரியர்
  12. கல்வி எல்லார்க்கும் பொது
  13. நாற்குலம் தொழில்பற்றிய பாகுபாடு
  14. கொலைத்தண்டம் எல்லாக் கடுங் குற்றவாளிகட்கும் பொது
  15. தமிழிலும் மறையுண்டு
  16. எல்லா மொழியும் இறைவனுக்கு ஏற்கும்
ஆரியம்
  1. முத்திருமேனி வழிபாடு
  2. நான்முகன், திருமால், உருத்திரன் (சிவன்) ஆகிய மூவரும் முறையே படைப்பும் காப்பும் அழிப்பும் செய்பவர் எனல்
  3. ஆரிய மந்திரமும் சமற்கிருதமும் வழிபாட்டு வாயில்
  4. பிராமணக் குருக்கள்
  5. தீ வளர்த்தல்
  6. துறவறமும் வீடுபேறும் பிராமணர்க்கே உயியன
  7. மாணவம் (பிரமசாரியம்), இல்வாழ்க்கை (கிருகசுதம்), காடுறைவு ( வானப்ரசுதம்), துறவு ( சந்நியாசம்) எனப் பிராமணன் வாழ்க்கை நிலை நான்கு.
  8. துறவறத்தால் மட்டும் வீடுபேறு
  9. பிறப்பால் சிறப்பு
  10. சமற்கிருதமே தேவமொழி; தமிழ் இழிமொழி எனல்.
  11. பிராமணரே தானம் பெறற்குரியவர்
  12. கல்வி பிராமணனுக்கே சிறப்பு
  13. நால்வரணம் இறைவன் படைப்பு
  14. கொலைத்தண்டம் பிராமணனுக்கு இல்லை.
  15. ஆரியத்தில்தான் வேதம் உண்டு
  16. சமற்கிருதம் ஒன்றே  இறைவனுக்கு ஏற்றது
தொகுப்பு/ஆக்கம் : அ.பன்னீர்ச்செல்வம் மலேசியா.
மூலம் : தமிழ் மதம், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்